திண்டுக்கல்: விஷப் பூச்சி கடித்து மூன்று வயது குழந்தை பலியான சோகம்!


திண்டுக்கல்: விஷப் பூச்சி கடித்து மூன்று வயது குழந்தை பலியான சோகம்!
x

வட மதுரை அருகே விஷப் பூச்சி கடித்து மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், வட மதுரை அருகே பிச்சம்பட்டியை சேர்ந்த மரம் வெட்டும் கூலித் தொழிலாளர் பால்காளை. இவர் கோவிலூர் அருகே தினமும் கூலி வேலைக்கு சென்று விடுவார்.

இவருக்கு 3 வயதில் காவிய தர்ஷினி என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது கண்ணுக்குத் தெரியாத பூச்சி கடித்துள்ளது. இதற்கு வீட்டின் அருகிலேயே மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தை மயங்கி நிலையில் இருப்பது கண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மூன்று வயது குழந்தை உயிரிழந்த நிலையில் கிராமமே சோகத்தில் மூழ்கியது.


Next Story