விபத்தில் பெண் பலி


விபத்தில் பெண் பலி
x

ஊத்துமலை அருகே விபத்தில் பெண் பலியானார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஊத்துமலை அருகே உள்ள ஆர்.நவநீதகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 50). இவர் வேலை சம்பந்தமாக மொபட்டில் ஊத்துமலைக்கு சென்றார். பின்னர் ஊருக்கு திரும்பி வரும் போது, அதே ஊரை சேர்ந்த வெள்ளைசாமி மனைவி சவுந்தரவள்ளி ஊரில் இறக்கி விடுமாறு லிப்ட் கேட்டு, கோபாலகிருஷ்ணன் மொபட்டில் ஏறினார்.

ஊர் அருகே வந்து கொண்டு இருந்த சவுந்தரவள்ளியில் சேலை எதிர்பாராதவிதமாக மொபட் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறிய அவர் மொபட்டில் இருந்து கீழே விழுந்து மயங்கினார். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஊத்துமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சவுந்தரவள்ளியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story