துறையூரில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
துறையூரில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
துறையூரில் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார் (வயது 41). மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்குள் புகுந்த மர் நபர் 6 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான திருட்டு ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவர் துறையூர் கீழ குத்தி தெருவை சேர்ந்த முகமது உசேன் மகன் திப்பு சுல்தான் (24) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகை-பணத்தை மீட்டனர்.
Related Tags :
Next Story