தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்பு


தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்பு
x

மானாமதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மானாமதுரை நகராட்சி சார்பில் என் குப்பை, எனது பொறுப்பு என்ற நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ராஜமணி, நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் பிரியா, சித்ரா, கங்கா, புருஷோத்தமன் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூய்மை பணி குறித்து நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி உறுதிமொழி வாசிக்க மாணவிகள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாணவிகளிடம் குப்பைத் தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரஆய்வாளர் தங்கதுரை செய்திருந்தார்.


Related Tags :
Next Story