சத்தியமங்கலம் அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்து நாசம்; 6 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்


சத்தியமங்கலம் அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்து நாசம்; 6 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 31 July 2022 9:41 PM GMT (Updated: 31 July 2022 9:45 PM GMT)

சத்தியமங்கலம் அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்து நாசம்; 6 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்

ஈரோடு

சத்தியமங்கலம்

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவருடைய மகன்கள் செல்வராகவன் (25), குமார் ராஜா (21). இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றனர். அங்கு அம்மனை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஜலகண்டாபுரம் நோக்கி அவர்கள் 3 பேரும் திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை மாணிக்கம் ஓட்டினார்.

இதேபோல் தாளவாடியை சேர்ந்த மகேஷ் (45), பசுவராஜ் (34), ஜெயதுல்லா (48) ஆகிய 3 பேரும் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை மகேஷ் ஓட்டினார். சத்தியமங்கலத்தை அடுத்த வடவள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது மாணிக்கத்தின் காரும், மகேசின் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 கார்களில் இருந்த 6 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து ஏற்பட்டதும், மகேசின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இதனிடையே காயம் அடைந்த 6 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story