நீச்சல் போட்டியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை
நீச்சல் போட்டியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
கரூர்
திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்திற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சையது அபூபக்கர் மூன்றாம் இடமும், மாணவர்கள் கார்த்திக் ராஜா, சுதர்சன், சேதுபதி, சையது அபூபக்கர், ஆகியோர் 2-ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், துறை பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story