அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

கட்சி அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சேலம்

அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் அவைத்தலைவர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் சரவணன், மாரியப்பன், முருகன், யாதவமூர்த்தி, சண்முகம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story