அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது


அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது
x

அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

கொலை

திருச்சி காட்டூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 40). இவர் டிபன் கடை நடத்தி வந்ததோடு, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர் கடந்த 9-ந் தேதி மாலை தனது நண்பர்களை பார்க்க சென்றார். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடை பாரில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரண்ராஜை, அவர்கள் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

2 பேர் கைது

விசாரணையில், இந்த சம்பவத்தில் உறையூர் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகரான சாமிநாதன் (42), திருஞானம் (36) உள்ளிட்ட 4 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் சாமிநாதன், திருஞானம் ஆகிய 2 பேரையும் நேற்று உறையூர் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், நிலம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சரண்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story