கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி
x

கடையத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் சங்கிலி பறிக்க முயன்றனர்.

தென்காசி

கடையம்:

அம்பை அருகே உள்ள வைராவிகுளம் ஆர்.சி.சர்ச் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள்சேவியர். இவர் தனது மனைவி மல்லிகாவுடன் நேற்று முன்தினம் இரவு இலஞ்சி பள்ளியில் படிக்கும் தங்களது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கடையத்தில் தென்காசி-அம்பை மெயின் ரோட்டில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சென்றபோது திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் மல்லிகாவின் தாலிச்சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அப்போது மல்லிகா சங்கிலியை தனது இரு கைகளால் பலமாக பிடித்துக்கொண்டதால் சங்கிலியின் கால் பகுதி மட்டும் மர்மநபர்களின் கையில் சிக்கியது. எப்போதும் ஆட்கள் நடமாட்டம் நிறைந்த இந்த இடத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story