வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: பெட்ரோல் கேனை அதிகாரிகள் மேஜையில் வைத்து மிரட்டிய முதியவர்..!


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: பெட்ரோல் கேனை அதிகாரிகள் மேஜையில் வைத்து மிரட்டிய முதியவர்..!
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த முதியவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

வேலூர் அருகே உள்ள மூஞ்சூர் பட்டு அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 66) இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். காயிதே மில்லத் அரங்கு முன்பு வரிசையில் நின்று மனு கொடுக்க சென்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அருகே சென்றதும் தான் மறைத்து வைத்து கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து மாவட்ட அலுவலர் முன்பு மேஜையில் வைத்தார். இதனை கண்டதும் அதிகாரிகள் திடுக்கிட்டனர்.

தனது வீட்டுக்கு செல்லும் வழி பாதையை ஆக்கிரமித்து மணல் கொட்டி வைத்துள்ளனர். இது பற்றி கேட்டால் தகராறு ஏற்படுவதாகவும் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்வேன் என முதியவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெட்ரோலை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். சத்துவாச்சாரி போலீசார் முதியவர் ரவியிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story