போதை பொருள் ஒழிப்பு பிரசாரம்
திண்டுக்கல்லில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு பிரசாரம் நடந்தது.
திண்டுக்கல்
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், திண்டுக்கல் பேகம்பூரில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜமால்முகமது தலைமை தாங்கினார். இதில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் கலந்து கொண்டு மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.
இதையடுத்து பேகம்பூரில் பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் அங்கு போதைபொருள் ஒழிப்பு பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் நைனா முகமது, பொருளாளர் ரபீக்முகமது மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story