அரசியலில் எதுவும் நடக்கலாம்; டி.டி.வி.தினகரன் பேட்டி
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்
தேனியில் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் சையதுகான் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தது மரியாதை நிமித்தமானது. இதில் அரசியல் எதுவுமில்லை. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு கேட்டால் கொடுப்பீர்களா என்று கேட்கிறீர்கள். யூகத்துக்கு பதில் சொல்ல முடியாது. நாங்கள் தனி இயக்கமாக செயல்படுகிறோம்.
பட்டிதொட்டி எல்லாம் எங்கள் இயக்கம் சென்றடைந்துள்ளது. ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்ற எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். தமிழக மக்கள் நிச்சயம் எங்களுக்கு வெற்றியை தருவார்கள் என்றார்.
சசிகலா அ.தி.மு.க.வில் இணைவதற்கோ அல்லது உங்கள் கட்சியில் இணைவதற்கோ வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும், அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்தார்.