வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் - கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் - கலெக்டர் தகவல்
x

வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையினை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வி தகுதியை பதிவு செய்து 5 வருடங்களும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வருடமும் போதுமானது. உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம் (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து வருகின்ற ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். அத்துடன் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.


Next Story