ஜீவன் ரக்சா விருது பெற விண்ணப்பிக்கலாம்


ஜீவன் ரக்சா விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

ஜீவன் ரக்சா விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார- தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் பிரிவுகளில் ஜீவன் பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்சா பதக்கமும், துணிச்சலுடன் தாமதம் இன்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு உத்தம் ஜீவன் ரக்சா பதக்கமும் வழங்கப்படுகிறது. தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரை காப்பாற்றுபவர்களுக்கு ஜீவன் ரக்சா பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி 2022-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சா பதக்க விருதிற்கான விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், பெரம்பலூர் என்ற முகவரியில் பெற்று பூர்த்தி செய்து, அந்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு வருகிற ஆகஸ்டு 6-ந் தேதி மாலை 3 மணிக்குள் 3 நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story