மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது


மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
x

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை


சிவகங்கையை அடுத்த கருங்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது34). இவரது மனைவி தீபா (26). இவர் சிவகங்கை டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிகிறார். ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த தீபாவுடன் சேகர் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தீபா சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிவகங்கை நகர் இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தார்.


Related Tags :
Next Story