தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

மானாமதுரையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

மானாமதுரை நான்கு வழிச்சாலையில் இன்ஸ்பெக்டர் முத்துக்கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், திருமுருகன், நாகராஜ், முகமது பக்ருதீன், தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தூதையை சேர்ந்த சதீஸ்குமார், ராபின்சிங் என்பதும், மானாமதுரை சிப்காட், திருப்புவனம், சிவகங்கை ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மொபைல், 2 பவுன் தங்க சங்கிலி, 2 வாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story