குடிக்க பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது


குடிக்க பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
x

குடிக்க பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே உள்ள கழுகூரணி தெற்குதெரு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் முகேஷ் (வயது21). இவர் அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் முகேசை மிரட்டி மது குடிக்க பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த முகேசின் தந்தை கண்ணன் கண்டித்து மகனுடன் மர்ம நபர்களை மடக்கி பிடிக்க முயன்றார். இதில் ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துள்ளார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கீழே விழுந்தவரை பிடித்து ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் அருகே உள்ள காருகுடியை சேர்ந்த மாதவன் மகன் மணி என்ற மணிகண்டன் (28) என்பதும் இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து மணி என்ற மணிகண்டனை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தப்பி ஓடிய பசும்பொன்நகர் மாதவன், நேருநகர் ஒயிட் மணி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story