வாலிபரின் காதை கடித்தவர் கைது


வாலிபரின் காதை கடித்தவர் கைது
x

வாலிபரின் காதை கடித்தவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்


பொள்ளாச்சி மாவட்டம் குள்ளக்கா பாளையம் கலைஞர்காலனியை சேர்ந்த ரோசி என்பவரின் மகன் விஜயகுமார் (வயது24). இவர் ராமநாதபுரம் புதிய பஸ்நிலைய பகுதியில் பச்சை குத்தும் வேலை செய்து வருகிறார். இவரின் உறவினர் சக்தி என்பவர் அந்த பகுதியில் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதுரை கருப்பாயூரணி கிழக்குத்தெருவை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பூவிழிராஜன் (22) என்பவர் தள்ளுவண்டியில் இருந்த கடலையை எடுத்து தின்று கொண்டு தரக்குறைவாக பேசிக்கொண்டு இருந்தாராம். இதனை சக்தி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை கண்ட விஜயகுமார் அங்கு சென்று பூவிழிராஜனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூவிழிராஜன் தரக்குறைவாக பேசி தாக்கியதோடு விஜயகுமாரின் காதை கடித்தாராம். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவிழிராஜனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story