ராசிபுரம் அருகே 13 வயது சிறுமி கடத்தல்; சிற்பி போக்சோவில் கைது


ராசிபுரம் அருகே  13 வயது சிறுமி கடத்தல்; சிற்பி போக்சோவில் கைது
x

ராசிபுரம் அருகே 13 வயது சிறுமி கடத்தல்; சிற்பி போக்சோவில் கைது

நாமக்கல்

ராசிபுரம், ஆக.6-

மயிலாடுதுறை மாவட்டம் பொறையூர் அருகே உள்ள காளியப்பநல்லூரை சேர்ந்த மாரியப்பன் மகன் அய்யப்பன் (வயது 24). கோவில் சிற்பி. இவர் கடந்த 3 மாதங்களாக ராசிபுரம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் சிற்ப வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் அய்யப்பன் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது. இதுபற்றி சிறுமியின் தந்தை ராசிபுரம் போலீசில் தனது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிற்பி அய்யப்பன் அந்த சிறுமியுடன் அவரது சொந்த ஊரில் இருந்து வந்ததை கண்டுபிடித்த ராசிபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று அய்யப்பனை கைது செய்தனர். சிறுமியை மீட்டனர். பின்னர் போலீசார் அய்யப்பனை போக்சோவில் கைது செய்து ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின்படி அய்யப்பன் ராசிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி நாமக்கல்லில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story