கட்டிட தொழிலாளிகள் 3 பேர் கைது


கட்டிட தொழிலாளிகள் 3 பேர் கைது
x

கட்டிட தொழிலாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை சிக்கந்தர்சாவடி சுசிநகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 50). இவரது மகன் உத்தமராஜா. கட்டிட தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று உத்தமராஜா கூடல்நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கட்டிட தொழிலாளர்களான சிக்கந்தர்சாவடியை சேர்ந்த ராஜா (40), சிக்கந்தர்சாவடி கோவில்பாப்பாகுடியை சேர்ந்த தினேஷ்குமார் (25), அவரது சகோதரர் சதீஷ்குமார் (23) ஆகியோர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் உத்தமராஜாவை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story