ஈரோட்டில் போதை மாத்திரை, ஊசி விற்ற 2 வாலிபர்கள் கைது


ஈரோட்டில் போதை மாத்திரை, ஊசி விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

ஈரோட்டில் போதை மாத்திரை, ஊசி விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

போதை மாத்திரை

ஈரோடு சாஸ்திரிநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள், சாஸ்திரிநகர் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சந்திரசேகரனின் மகன் பிரதாப் (வயது 19), கொல்லம்பாளையம் திரு.வி.க.வீதியை சேர்ந்த சின்னகாளையின் மகன் அய்யனார் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

கைது

அவர்களிடம் நடத்திய சோதனையில் ஒரு கஞ்சா பாக்கெட்டும், 30 போதை மாத்திரைகளும், ஒரு ஊசியும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்கள் 2 பேரும் போதை மாத்திரைகள், ஊசி, கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரதாப், அய்யனார் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், பிரதாப், அய்யனார் ஆகியோருக்கு போதை மாத்திரைகள், கஞ்சாவை வினியோகம் செய்து வந்த அன்பு என்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story