சேலம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது


சேலம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது
x

சேலம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய உயரம் குறைவான மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு திடீரென நேற்று அதிகாலை வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண் 8 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கியது பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சடையன் (வயது 63) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story