ஆயுதத்துடன் வாலிபர் கைது


ஆயுதத்துடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:47 PM GMT)

ஆயுதத்துடன் வாலிபர் கைது ெசய்யப்பட்டார்.

மதுரை

மதுரை தெப்பக்குளம் போலீசார் குருவிக்காரன் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்கேதம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது வாள் போன்ற ஆயுதத்துடன் அவர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக கீழ அண்ணாதோப்பு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த வாள் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story