கஞ்சா விற்றவர் கைது
கிருஷ்ணாபுரம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணாபுரம் போலீசார் திப்பம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. போலீசாரை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 39) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story