மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x

தேனி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் வீரபாண்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரபாண்டி அருகே முத்துதேவன்பட்டி கண்மாய் பகுதியில் சந்தேகப்படும் வகையில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பிஓடிவிட்டார். மற்ற 2 பேரும் சிக்கினர். விசாரணையில் அவர்கள், லட்சுமணநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த அஜித் (வயது 24), முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்த ராஜபிரபு (23) என்பதும், தப்பி ஓடியவர் சூரியபிரகாஷ் என்பதும் தெரியவந்தது. மேலும் மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்த அருண் என்பவரிடம் 3 பேரும் கஞ்சா வாங்கி, விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட அஜித், ராஜபிரபுவை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சூரியபிரகாஷ் மற்றும் கஞ்சா வினியோகம் செய்த அருண் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story