பிளஸ்-2 மாணவன் கடத்தல் வழக்கில் உறவினர் கைது


பிளஸ்-2 மாணவன் கடத்தல் வழக்கில் உறவினர் கைது
x

தர்மபுரியில் பிளஸ்-2 மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய உறவினரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தர்மபுரி

தர்மபுரியில் பிளஸ்-2 மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய உறவினரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மாணவன் கடத்தல்

தர்மபுரி ஆவின் நகரை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினருடன் சினிமா பார்த்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர். பின்னர் மாணவரின் தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரூ.1 கோடி கேட்டு அந்த நபர்கள் மிரட்டல் விடுத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள் ஓசூர் அருகே மாணவனை காரில் இருந்து இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அந்த மாணவனை ஓசூர் சிப்காட் போலீசார் மீட்டு தர்மபுரி போலீசில் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் தொடர்பாக தர்மபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

உறவினர் கைது

இந்த நிலையில் மாணவனுடன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அவருடைய உறவினர் பாலாஜி (34) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பாலாஜியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இந்த கடத்தல் சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலாஜியை தர்மபுரி டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Next Story