கூடலூரில் மது விற்றவர் கைது


கூடலூரில் மது விற்றவர் கைது
x

கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தேனி

உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் போலீசார் இன்று கூடலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு கூடலூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த முனியப்பன் (வயது 42) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 173 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,000-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story