கஞ்சா பதுக்கி விற்ற 18 பேர் கைது


கஞ்சா பதுக்கி விற்ற 18 பேர் கைது
x

தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவுப்படி அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் அந்தந்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நேற்று நடந்த சோதனையின்போது கஞ்சா பதுக்கி வைத்து விற்றதாக 18 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story