வாலிபரை மரத்தில் கட்டிவைத்து தாக்குதல்


வாலிபரை மரத்தில் கட்டிவைத்து தாக்குதல்
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:46 PM GMT)

வாலிபரை மரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள நரையன்குடியிருப்பு கிராமத்தில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் வீடுகளை நோட்டமிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள், அந்த நபரை பிடித்து மரத்தில் கட்டிவைத்து தட்டார்மடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அந்த நபரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23) எனவும், அவரது பெற்றோர் சென்னையில் இருப்பதாகவும், இங்குள்ள பாட்டி வீட்டில் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது.

மேலும் மணிகண்டன் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்ததால் அவரது பாட்டி கண்டித்ததாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story