பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து மாணவர் மீது தாக்குதல்


பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து மாணவர் மீது தாக்குதல்
x

நெய்வேலியில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து மாணவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவர் இந்திரா நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கூடத்தில் இருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த திருமுருகன், எலி என்கிற சந்துரு, கைலாஷ், சரவணன் ஆகிய 4 பேரும் மாணவரை சரமாரியமாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் காயமடைந்த மாணவர் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமுருகன் உள்பட 4 பேர் மீதும் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story