பெண்ணின் வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயற்சி


பெண்ணின் வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயற்சி
x

வாய்மேடு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணின் வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாயில் விஷம் ஊற்றினார்

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள சிறுதலைக்காடு மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது45). இவருடைய மனைவி தனபாக்கியம்(35). இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் குமார் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு குமார் தனது மனைவி தனபாக்கியம் மீது சந்தேகப்பட்டு அவரது கையை பின் பக்கத்தில் வைத்து கட்டி வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) சொம்பில் தண்ணீருடன் கலந்து வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த தனபாக்கியம் கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தனபாக்கியத்தை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story