செங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி


செங்கோட்டை அருகே  மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி
x

செங்கோட்டை அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஆட்டோ டிரைவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்

தென்காசி

கடையநல்லூர்:

செங்கோட்டை அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஆட்டோ டிரைவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

ஆட்டோ டிரைவர்

ெதன்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தேன் பொத்தை பஞ்சாயத்து திருமலாபுரம் இல்லத்தார் தெருவை சேர்ந்தவர் செய்யது அஹ்மது மகன் முகம்மது மைதீன் என்ற மூஸா (வயது 48). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். அதில் அவரே டிரைவராக இருந்து வந்தார்.

நேற்று காலை திருமலைக்கோவில் செல்லும் வழியில் உள்ள தனது உறவினருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு குளிக்க சென்றார்.

மின்சாரம் தாக்கி பலி

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவில் தோப்பில் உயர்அழுத்த மின் ஒயர் ஒன்று அறுந்து விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காத முகம்மது மைதீன் என்ற மூஸா அதனை மிதித்து விட்டார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அச்சன்புதூர் போலீசார் சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த முகம்மது மைதீனுக்கு ஆமினாள் (45) என்ற மனைவியும், பீர்முகம்மது (20) என்ற மகனும், அர்சத் பேகம் (17) என்ற மகளும் உள்ளனர்.


Next Story