விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

தூத்துக்குடியில் மனித கடத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது

தூத்துக்குடி

]உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன், ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன், ரெயில்வே குழந்தைகள் உதவி மையம் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர். பேரணியாக சென்றவர்கள் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகித்தனர். ரெயில் பயணிகள் மற்றும் போலீசார் தூத்துக்குடி ரெயில் நிலையத்தை குழந்தை கடத்தல் இல்லாத குழந்தை நேய ரெயில் நிலையமாக மாற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே பாதுகாப்பு போலீசார், ரெயில்வே குழந்தைகள் உதவிமையத்தினர், ரெயில் பயணிகள் கலந்து கொண்டனர்.


Next Story