விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி

அம்பை:

அம்பை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலத்தின் சார்பில் உலக தாய்பால் வார விழாவை முன்னிட்டு அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அம்பை காசிநாதர் கோவில் தெருவில் அமைந்துள்ள திட்ட அலுவலகம் முன்பு புறப்பட்ட பேரணியை நகர்மன்ற தலைவர் கே.கே.சி.பிரபாகரன், யூனியன் தலைவர் பரணி சேகர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சொர்ணலதா எஸ்தர் அனைவரையும் வரவேற்றார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது. முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story