காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருச்சி

காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திருச்சியில் நடந்தது. ஆர்.சி. பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் 12 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் காற்று மாசுபடுவதை தடுப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story