கடமலைக்குண்டு அருகே ஓடையில் கிடந்த சிசு உடல்


கடமலைக்குண்டு அருகே ஓடையில் கிடந்த சிசு உடல்
x

கடமலைக்குண்டு அருகே ஓடையில் ஆண் சிசு உடல் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரம் அருந்ததியர் காலனி அருகே உள்ள ஓடையில் நேற்று மாலை பிறந்து ஓரிரு நாட்களே ஆன ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. அதன் உடலை நாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நாய்களை விரட்டிவிட்டு, கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசுவின் உடலை ஓடையில் வீசிச்சென்றது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story