பால தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்


பால தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்
x

பால தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கரூர்

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி கிராமத்துக்குட்பட்ட பாலப்பட்டியில் பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேகம் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. பின்னர் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை உள்பட பல்வேறு யாக பூைஜகள் நடந்தது.

தொடர்ந்து நேற்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பாலதண்டாயுதபாணி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீைர ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்க அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story