சிதம்பரம்தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு :ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 731 காணிக்கை வசூலானது


சிதம்பரம்தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு :ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 731 காணிக்கை வசூலானது
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்ட்டது. இதில் ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 731 காணிக்கை வசூலானது.

கடலூர்


சிதம்பரம்,

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள 6 உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்க பெருமாள் தலைமையில், கோவில் செயல் அலுவலர் ச. சரண்யா, காட்டுமன்னார்கோவில் செயல் அலுவலர் ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, உண்டியலில் இருந்த காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 731 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மேலும் உண்டியலில் 11 கிராம் தங்கம், 12.500கிராம் வெள்ளி மற்றும் சிங்கப்பூர் டாலர் 1, ஆகியவையும் இருந்தது தெரியவந்தது.


Next Story