வேலையில் இருந்து நின்றதால் டிரைவர் மகன்களையும் வெளியேற்றிய தனியார் பள்ளி


வேலையில் இருந்து நின்றதால்  டிரைவர் மகன்களையும் வெளியேற்றிய தனியார் பள்ளி
x
தினத்தந்தி 1 July 2022 5:13 PM GMT (Updated: 1 July 2022 5:15 PM GMT)

டிரைவர் வேலையில் இருந்து நின்றதால் அவரது மகன்களையும் வெளியேற்றிய தனியார் பள்ளி மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடு்க்கப்பட்டுள்ளது

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரை சேர்ந்த ராஜ்நேரு என்பவர் தனது இரு மகன்களுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது அன்பழகனிடம் அவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், " நான் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில், பள்ளி வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தேன். பின்னர் அந்த வேலையில் இருந்து நின்று விட்டேன். எனது 2 மகன்களையும் அதே பள்ளியில் சேர்த்திருந்தேன். இந்நிலையில் எனது மகன்களை பள்ளிக்கு வரவேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் வெளியேற்றிவிட்டது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.


Next Story