கரூரில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி


கரூரில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
x

கரூரில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூர்

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதனையொட்டி கரூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

இப்பேரணி கரூர் ரெயில் நிலையத்தில் தொடங்கி சர்ச் கார்னர், திண்ணப்பா கார்னர், பஸ் நிலையம் வழியாக சென்று திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. முன்னதாக முதல்-அமைச்சரின் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்.இ.டி. வாகனத்தில் ஒளிபரப்பப்பட்டது.


Next Story