சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்பது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை


சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்பது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை
x

சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வர உள்ளார்.

இந்த நிலையில், சென்னை தி-நகரில் உள்ள பா.ஜ.க.வின் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள், மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துதல் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக ஜன சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் வி.கே.ஜானின் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story