ரத்த தான முகாம்


ரத்த தான முகாம்
x

ரத்த தான முகாம் நடந்தது.

அரியலூர்

வி.கைகாட்டி:

விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'சுதந்திர திருநாள் அமுத பெருவிழா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பு ரத்த தான முகாம், கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. ரத்த தான முகாமிற்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த மைய மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, ரத்த வகை கண்டறிந்து குருதி தான சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முகாமில் 30 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது ரத்த வகையை அறிந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர் ஆதிலட்சுமி செய்திருந்தார்.


Next Story