சிமெண்டு கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு


சிமெண்டு கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு
x

சிமெண்டு கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.

கரூர்

நங்கவரம் பேரூராட்சி காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகன். இவர் நங்கவரம் வாரிக்கரை அருகே சொந்தமாக சிமெண்டு கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல தனது கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை முருகன் தனது கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவை உடைத்து அதில் இருந்த ரூ.4 ஆயிரம் 760-ஐ மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், அதே கட்டிடத்தில் முரளி என்பவர் நடத்தி வரும் மளிகைகடையின் பூட்டை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உடைத்துள்ளனர். இதனால் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தூங்கி கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைக்கண்ட மர்மநபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்தும் குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story