பூ மண்டியின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பூ மண்டியின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பூ மண்டி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வியாபாரம் முடிந்து சரவணன் பூ மண்டியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். ஊழியர் வினோத் நேற்று காலை பூ மண்டிக்கு வந்து பார்த்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பூ மண்டியின் உள்ளே கல்லாவில் இருந்த ரூ.4 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story