அரசு பஸ் டயர் வெடித்ததால் பயணிகள் அவதி


அரசு பஸ் டயர் வெடித்ததால் பயணிகள் அவதி
x

அரசு பஸ் டயர் வெடித்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

பட்டுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் தொண்டி அருகே உள்ள நம்புதாளை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் சென்றபோது டயர் திடீரென வெடித்து நின்றுவிட்டது. உடனே இந்த அரசு பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். இந்த பஸ்சில் கூடுதலாக டயர் இல்லாததால் உடனடியாக அதனை ஓட்டுனர் நடத்துனரும் சரி செய்து பயணிகளை ஏற்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் கைக் குழந்தைகளுடன், கையில் பை போன்ற பொருட்களுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். அதன் பிறகு வந்த அரசு பஸ்சில் பயணிகள் அதிக அளவில் வந்த நிலையில் வேறு வழியின்றி அனைவரும் மிகுந்த சிரமத்துடன் பயணிகள் சென்றனர்.


Related Tags :
Next Story