மணல் கடத்த முயன்ற சரக்கு ஆட்டோ பறிமுதல்


மணல் கடத்த முயன்ற சரக்கு ஆட்டோ பறிமுதல்
x

மணல் கடத்த முயன்ற சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் சிலர் அரசு அனுமதி இன்றி மணல் திருடி வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிமுத்து தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட காவிரி ஆற்றுப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு சரக்கு ஆட்டோவில் காவிரி ஆற்றுக்குள் மணலை அள்ளி ஏற்றிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சரக்கு ஆட்டோவில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். விசாரணையில் தப்பி ஓடியவர்கள் கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் சசிகுமார், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஓலப்பாளையம் அருகே உள்ள கூடுதுறை பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சவுந்தரராஜன் ஆகியோர் என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story