இரு தரப்பினர் மோதல்; 12 பேர் மீது வழக்குப்பதிவு


இரு தரப்பினர் மோதல்; 12 பேர் மீது வழக்குப்பதிவு
x

கெங்கவல்லியில் இரு தரப்பினர் மோதல்; 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் சின்னசாமி (வயது 60). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. முன்விரோதத்தால் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் கெங்கவல்லி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பை சேர்ந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story