1,500 வழக்குகளில் சமரசம் மூலம் ரூ.5½ கோடி தீர்வு


1,500 வழக்குகளில் சமரசம் மூலம் ரூ.5½ கோடி தீர்வு
x

ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1,500 வழக்குகளில் சமரச தீர்வு மூலம் ரூ.5 கோடியே 66 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1,500 வழக்குகளில் சமரச தீர்வு மூலம் ரூ.5 கோடியே 66 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.

சட்டப்பணிகள்

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார்.

கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், மகிளா கோர்ட்டு நீதிபதி சுபத்ரா, முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், விரைவு விசாரணை கோர்ட்டு நீதிபதி விர்ஜின்வெஸ்டா, நீதித்துறை நடுவர் எண்.1 நீதிபதி சிட்டிபாபு, எண்.2 நீதிபதி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒத்துழைப்பு

நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி விஜயா லோக் அதாலத் நிகழ்வில் தீர்வு காணப்படும் வழக்குகளில் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது. இரு தரப் பினருக்கும் வெற்றி-தோல்வி என்ற நிலை இருக்காது. கோர்ட்டு கட்டணம் திருப்பி தரப்படும்.

இதுபோன்ற லோக் அதாலத் நிகழ்ச்சியை வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் பயன்படுத்தி சமரச தீர்வு மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். வழக்காடிகளும், வக்கீல்களும் இதுபோன்ற சமரச தீர்வு முறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வழக்குகளை பார்த்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்து மாறி லோக் அதாலத் மூலம் சமரசம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.

தீர்வு

எந்தவொரு பிரச்சினைக்கும் பேசினால் தீர்வு ஏற்படும். அதனை உணர்ந்து இதுபோன்ற சமரச தீர்வு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் தங்களின் வழக்குகளை தீர்த்து சமாதானமாக செல்லலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டு களிலும் 10 அமர்வுகளாக நடைபெற்ற இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் மொத்தம் 1,500 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு சமரச தீர்வு மூலம் முடிவு காணப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.5 கோடியே 66 லட்சம் மதிப்பில் தீர்வாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திரராமவன்னி உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Next Story