கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Oct 2022 7:45 PM GMT (Updated: 7 Oct 2022 7:45 PM GMT)

நிலக்கோட்டை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகள் பிரியங்கா (வயது 28). இவர், நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் தனக்கும், தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ஜோதிபாஸ் (33) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின்போது, 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். எங்களுக்கு ரித்வான் என்ற 5 வயதில் மகன் உள்ளான். கடந்த சில நாட்களாக எனது கணவர் வேலைக்கு செல்லாமல், என்னிடம் ரூ.15 லட்சம் வரதட்சணை வேண்டும் என்று கேட்டு துன்புறுத்தி, வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். எனவே கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியங்கா புகார் மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் கணவர் ஜோதிபாஸ், அவரது தந்தை பெருமாள், தாய் மலர்க்கொடி, உறவினர் ரவீனா ஆகிய 4 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.





Next Story