வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு


வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
x

வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர்

குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 22). இவர் கடந்த 23-ந்தேதி 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கரூர் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பிற்கு வந்த ரகசிய தகவலின்படி குளித்தலை பொது நல அலுவலர் சரோஜா குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ராஜா மற்றும் ராஜாவின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story